சட்டவிரோத கடற்றொழிலை தடுக்க இலங்கைக்கு கைகொடுக்கும் நோர்வே
இலங்கையில் கடற்றொழில் படகுகளைக் கண்காணிப்பதற்கும், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் நோர்வே அரசாங்கம் நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.
அண்மையில் நோர்வேக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான தூதுக்குழுவினர், அந்நாட்டு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கையில் கடற்றொழில் படகுகளின் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும் உதவி வழங்குவதில் நோர்வே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
தொழில்நுட்ப தரவு அமைப்பு
இதன்படி, நோர்வே அரசாங்கம் இந்த நாட்டிற்கு மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்ப தரவு அமைப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மேம்பட்ட செயற்கைக்கோள் தரவு அமைப்பு தொழில்நுட்பத்தை இலவசமாகப் பெறுவதற்கான சாத்தியக்கூறு குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, இந்தத் தொழில்நுட்பத்தை மேலும் திறம்படப் பயன்படுத்துவதற்காக, கடற்வள அமைச்சகம் மற்றும் துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பயிற்சித் திட்டங்களை வழங்கவும் நோர்வே தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்