பொது மக்களுக்கு காவல்துறையினர் விடுத்த விசேட அறிவித்தல்!
Police spokesman
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Galle Face Riots
By Kanna
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து வீடுகள், வர்த்தக நிலையங்களில் இடம்பெற்ற வன்முறைச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 1997 மற்றும் 119 போன்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு சிறிலங்கா காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர்கள் குறித்த அறிக்கையில் அதனை குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில கடந்த 9 ஆம் திகதி அரச எதிர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மகிந்தவின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த தாக்குதலால் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து பொது மக்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள், அரச ஆதரவாளர்கள் என பலரின் வீட்டை சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி