NPP அரசின் கொழும்பு மேயரால் வெடித்தது சர்ச்சை!
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியால் கொழும்பு மாநகர சபையின்(CMC) மேயராக பரிந்துரைக்கப்பட்ட வ்ரே பால்தசார்(Vraie Balthazaar) சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு சுற்றுப்பயணம் சர்ச்சையாகியுள்ளது.
கொழும்பு மாநகர சபை நிர்வாகம் அமைக்கப்படுவதற்கு முன்பே அவர் எப்படி மேயராக செயல்பட முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
கொழும்பில் முறையான நிர்வாகம் நிறுவப்படுவதற்கு முன்பு, வார இறுதியில் கொழும்பில் கால்வாய் சுத்தம் செய்யும் திட்டத்தை ஆய்வு செய்வது போன்ற மேயர் கடமைகளை பால்தசார் மேற்கொண்டிருந்தார்.
கொழும்பு மேயர்
இந்த நிலையில், நிர்வாகம் நிறுவப்படுவதற்கு முன்பு எவ்வாறு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
CMC நிர்வாகம் சட்டப்பூர்வமாக உருவாக்கப்படுவதற்கு முன்பு பால்தசார் கொழும்பு மேயராக எப்படி செயல்பட முடியும் என ரஹ்மான் அதன்போது கேள்வி எழுப்பினார்.
ஒரு அமைப்பு மாற்றத்தை உறுதியளித்து NPP ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் அவர்கள் இருக்கும் அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை புறக்கணித்து முந்தைய எந்த அரசாங்கமும் செயற்படாதவாறு செயற்பட்டுள்ள வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
