யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டுப் பொருள்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரை நீதிமன்றில் முன்னியாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடு புகுந்து அச்சுறுத்தி பொருட்களுக்கு சேதம் விளைவித்த ஒருவருக்கு காவல்துறையினரால் பிணை வழங்க முடியாது என்றும் காவல்துறை பிணை வழங்கியது அரசியல் அழுத்தம் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் என்பவரே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஓய்வுபெற்ற அரச உத்தி யோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து வீட்டுப் பொருள்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து அச்சுறுத்தியதாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுபோதையில் குறித்த வீட் டிற்குள் நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 119 அவசர அழைப்பு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லியடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
அதிகாலை 12.45 மணியளவில் கைது செய்யப்பட்ட அவர் காலை 7.00 மணியளவில் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தகவல்வெளியாகி உள்ளது.
குறித்த நபரை காவல்துறை பிணையில் விடுவிக்க அரசியல் அழுத்தங்களும், காவல்துறை உயர் அதிகாரிகளின் அழுத்தங்களும் தான் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |