வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை! சந்தேகநபர் கைது
வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த லேகியம் உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை காவல்துறையினர் இன்று முற்றுகையிட்டதுடன் அங்கு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400 ற்கும் மேற்ப்பட்ட லேகியப் பக்கற்றுகள் அங்கு கைப்பற்றப்பட்டதுடன் 20 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலக்காக்கப்பட்டுள்ள மாணவர்கள்
இந்த லேகியங்கள் வவுனியா நகரை அண்டிய பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, குறித்த லேகிய உற்பத்தி நிலையத்தின் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |