நாட்டில் 243 தாதியர்களுக்கு கொரோனா தொற்று
srilanka
corona
nurses
By Sumithiran
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 243 தாதியர்களும் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் புஸ்பா ராமணாய் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவர்,
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் 27 தாதியர்கள் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
தாதியர்களுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அவர்களுடன் பணியாற்றும் ஊழியர்களையும் தனிமைப்படுத்தவேண்டி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்