வவுனியா வைத்தியசாலை விவகாரம் - வெளிவந்துள்ள புதிய சர்ச்சை!
Vavuniya
Hospitals in Sri Lanka
By Kathirpriya
வவுனியா பொது வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தை ஒன்றுக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள் குறித்து வெளிவந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் உள்ளடங்களாக நால்வர் கொண்ட விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த நான்காம்(04) திகதி வவுனியா பொது வைத்தியசாலையில் தாயொருவர் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
இதன்போது குறித்த விடுதிக்கு பொறுப்பான தாதியர் மற்றும் விடுதியில் பணியாற்றிய பெரும்பான்மையின தாதிய உத்தியோத்தர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதியநேர செய்தி தொகுப்பில் காணுங்கள்