ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை பலியெடுத்த தொடருந்து விபத்து!
நுவரெலியா வட்டவலை ரொசல்ல பகுதியில் தொடருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே என்ற தொடருந்து மோதியே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மஸ்கெலியா- சாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று புதன்கிழமை முற்பகல் 11.55 அளவில் ரொசல்ல தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றதாக வட்டவலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே என்ற தொடருந்துடன் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. சடலங்கள் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரனைகளை வட்டவலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.