காரில் பின் இருக்கையில் இருந்த சிறுமியால் நிகழ்ந்த விபரீதம்
காரில் பின் இருக்கையில் இருந்த சிறுமியின் செயலால் பாதசாரி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(15) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பாணந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காரை செலுத்தி வந்த தாயார் தனது மகளுடன் தேவாலயத்திற்குச் சென்று , பின்னர் அவரை பின் இருக்கையில் அமரவைத்து களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்துள்ளார்.
திடீரென சாரதியின் இருக்கைக்கு குதித்த சிறுமி
வாதுவ, தல்பிட்டி பகுதியில் சிறுமி பின் இருக்கையில் இருந்து ஓட்டுநர் இருக்கைக்கு குதித்ததாகவும், இதன்போது கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பாதசாரி ஒருவர் மீதும், நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தி மீதும் மோதியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை
உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
