தென்னிலங்கையில் தொடரும் கொலைகள்! நேற்றும் மீட்கப்பட்ட சடலம்
Police
Murder
SriLanka
Peliyakoda
By Chanakyan
பேலியகொட காவல்துறைப் பிரிவில் இறைச்சி விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மீகஹாவத்தை - பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒரவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை பேலியகொட காவல் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 42 மற்றும் 45 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொட காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி