இணையவழி கற்பித்தல் வெற்றியளிக்காது! ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் தகவல்
இலங்கையில் அறுபது வீதமான மாணவர்களினால் இணைய வழியில் கற்றல் நடவடிக்கைகளை தொடர முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்பொழுது நாட்டில் இணைய வழியிலான கற்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் 12 வீதமான மாணவர்களினால் மட்டுமே இணைய வழி கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை என அரசாங்கம் முன்னதாக கூறியிருந்தது.
எவ்வாறெனினும், சுமார் 40 வீதமான மாணவர்கள் மட்டுமே இணை வழியில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஏனைய 60 வீதமான மாணவர்களினால் இணைய வழியில் கற்க முடியவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி கற்பிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இணைய வழியில் பாடங்களை கற்பிப்பதனை விடவும் தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு கற்பிப்பது பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் இணைய வழி கற்பித்தல் வெற்றியளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.