கந்தளாய் குளத்தில் 10 வான் கதவுகள் திறப்பு - கிழக்கில் தொடரும் பாதிப்பு

Sri Lanka Weather
By Independent Writer Nov 28, 2025 09:12 AM GMT
Report

கந்தளாய் குளத்தில் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கந்தளாய் குளத்தில் தேங்கும் நீரைக் கட்டுப்படுத்த, கந்தளாய் குளத்தின் இரண்டு வான் கதவுகளை மூன்று அடிக்கும், எட்டு வான் கதவுகள இரண்டு அடிக்கும் திறக்க கந்தளாய் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் இன்று நடவடிக்கை எடுத்தார்.

தற்போதுள்ள குளத்தின் நீர் மட்டத்தைக் குறைப்பதற்கும், குளத்தின் கீழ் பயிரிடப்படும் நெல் வயல்களில் வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொறியாளர் தெரிவித்துள்ளார்.

செய்தி -  தொம்ஸன்

திருகோணமலை 

திருகோணமலை மாவட்டத்தில் 5433 குடும்பங்களைச்சேர்ந்த 16063 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

110 வீடுகள் சேதம். காலை 11.00 மணி அளவில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் நடைபெற்றுவரும் அசாதரண காலநிலை காரணமாக 5433 குடும்பங்களைச்சேர்ந்த 16063 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தெரிவித்தார்.

அதில் 4999 குடும்பங்களைச்சேர்ந்த 14683 நபர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதுடன் குறிப்பாக 241 குடும்பங்களைச்சேர்ந்த 668 நபர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குளங்களது நீர்மட்டம் படிப்படியாக உயர்வதால் வான்கதவுகளை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கரையோரப் பகுதிகளில் வாளும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறும் அறிவுருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

தம்பலகாமம் ஊத்த வாய்க்கால்

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையின் காரணமாகும் திட்வா புயல் காரணமாகவும் முள்ளிப்பொத்தானை தம்பலகாமம் பிரதேச வயல் நிலப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) தம்பலகாமம் ஊத்த வாய்க்கால் உடைப்பெடுத்துள்ளதால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியால் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்கிறது.

குறித்த ஊத்தை வாய்க்கால் உடைப்பெடுத்ததால் அதனை சூழவுள்ள வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

கந்தளாய் குளத்தில் 10 வான் கதவுகள் திறப்பு - கிழக்கில் தொடரும் பாதிப்பு | Opening Of 10 Air Doors In Kandalai Pond

செய்தி - ரொஷான்

GalleryGallery
ReeCha
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026