இங்கிலாந்து ஹாட்லியைற்ஸ் கழக அனுசரணையில் பூநகரியில் மழலையர் பூங்கா திறப்பு (படங்கள்)
மழலையர் பூங்கா திறப்பு
இங்கிலாந்தில் இயங்கிவரும் ஹாட்லியைற்ஸ் விளையாட்டுகழக அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட மழலையர் பூங்கா அண்மையில் பூநகரியில் திறந்து வைக்கப்பட்டது.
அறம் செய் அறக்கட்டளையின் சிறுவர் பாடசாலையிலேயே இந்த மழலையர் பூங்கா திறக்கப்பட்டு பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவரும் யோகா கலை மற்றும் கராத்தே கலை பேராசானுமாகிய மாணிக்கவாசகம் இரத்தினசோதி கலந்து சிறப்பித்திருந்தார்.
மாணவர்களின் உடல் உள ஆரோக்கிய வாழ்வை கருத்தில்கொண்டு அவர்களை ஊக்கமளிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்தச் செயற்றிட்டம் செயற்படுத்தப்பட்டது.
இந்தச் செயற்பாடு மாணவர்களை ஒருபடி மேலும் உற்சாகப்படுத்தியிருப்பதாக பாடசாலையின் முதல்வர் ஞானசேகரம் சுட்டிக்காட்டியிருந்தார்.
இங்கிலாந்தில் இயங்கிவரும் ஹாட்லியைற்ஸ் விளையாட்டுகழகத்தின் அனுசரணை
அதேவேளை, திறந்து கையளிக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களின், உற்சாகமான விளையாடும் ஆர்வத்தை காணும் போது உலகளாவிய ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் பலரும் மனநிறைவு அடைகிறார்கள் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஹாட்லியின் பழைய மாணவருமாகிய சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்திருந்தார்.
இந்தச் செயற்றிட்டம் வெற்றிபெற உலகளாவிய ஹாட்லி பழைய மாணவர்கள் மற்றும் இங்கிலாந்து ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக நலன்விரும்பிகள் பலரும் கைகொடுத்திருந்ததாக குறிப்பிடப்படுகிறது.