நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டார் சஜித்!
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையொப்பமிட்டுள்ளார்.
இது குறித்து " மாற்றம் இல்லாமல் நிறுத்த போவதில்லை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதற்க்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் ” என சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
WITHOUT CHANGE, WE WILL NOT STOP. @sjbsrilanka signing of No Confidence Motion & Impeachment Motion. Constitutional Amendment to abolish Executive Presidency & Repeal 20th Amendment on the way. #ForwardTogether pic.twitter.com/O8gLiqgjPV
— Sajith Premadasa (@sajithpremadasa) April 13, 2022
அரச தலைவர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்க தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்கட்சி நாடாளுமன்றத்தின் கடந்த அமர்வின் போது தெரிவித்திருந்தது.
இதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையெழுத்து சேகரிக்கத் தொடங்கியுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி.