விடுதலை புலிகள் தலைவரின் வீட்டை கட்டும் திட்டம்: சபையில் வெடித்த சர்ச்சை
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்குவதை விடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் வீட்டினை கட்டும் திட்டத்தை இந்த அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புகாமி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (06-02-2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் செல்லும் பாதை பாரதூரமானது.
கடற்றொழிலாளர்கள்
இராணுவத்தினரைப் புறக்கணிக்கும் செயற்பாட்டை இந்த அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
நடைபெற்று முடிந்த சுதந்திர தினத்தில் இராணுவத்தினரின் தியாகங்கள் பேசப்படவில்லை.

மேலும், இந்தியக் கடற்றொழிலாளர்களால் எமது நாட்டு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்காக நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? குறித்த பிரதேசத்திற்குச் சென்று பார்வையிட்டீர்களா ? இது பாரதூரமான செயல்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |