பாடசாலைகள் ஆரம்பமாக உள்ள நிலையில் காவல்துறைக்கு பறந்த உத்தரவு
police
reopen
school
order
By Sumithiran
பாடசாலைகள் ஆரம்பமாவதை உறுதி செய்வதற்கு அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளும்( OIC )தமது பங்களிப்பை செய்ய வேண்டும் என்றும், அதிபர்களை சந்தித்த பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதைத் தடுப்பவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறை பிரிவில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகளை அடையாளம் காண்பது, பாடசாலைகள் திறப்பது பற்றி அதிபர்களை சந்திப்பது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை தரும் பகுதிகள் பற்றிய தகவல்களைப் பெறுவது ஆகியவற்றையும் செயற்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 9 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி