மீண்டும் விசாரணை வலைக்குள் சிக்கப்போகும் ஹேமசிறி - பூஜித் ஜெயசுந்தர
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாமல் பலல்லே மற்றும் முகமது இர்ஷதீன் ஆகிய மூவர் கொண்ட கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரநர்கள் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (28.07.2025) விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் 18 ம் திகதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற அமர்வு
வழக்கை விசாரித்த மூன்று பேர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வின் உறுப்பினரான நீதியரசர் ஆதித்யா படபெந்திகே, தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதால், புதிய நீதியரசர்கள் அமர்வை நியமிக்குமாறு புதிய தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலிபா பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, புதிய அமர்வு நியமிக்கப்படும் வரை இந்த வழக்கின் விசாரணைக்கு மற்றொரு திகதியை வழங்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தை கோரினார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, வழக்கை செப்டம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
