அரசாங்கத்தினை வீழ்த்துவதே எமது பிரதான இலக்காக உள்ளது - வாசுதேவ நாணயக்கார

sajith goverment Vasudevananayakkara srilanakan politics
By Vanan Apr 10, 2022 06:19 AM GMT
Report

அரசாங்கத்தினை வீழ்த்துவதே எமது பிரதான இலக்காக உள்ளது. அவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதால் பயனில்லை என இடதுசாரியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தினை வீழ்த்துவதே பிரதான இலக்காக உள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவருவது வீணானது என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பத்துக்கட்சிகளைக் கொண்ட அணியினர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த விடயம் சம்பந்தமாக பத்துக்கட்சிகள் அணியில் அங்கத்துவம் வகிக்கும் இடதுசாரியின் தலைவர் வாசுதேவநாணயக்கார கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினை வீழ்த்துவதே எமது பிரதான இலக்காக உள்ளது. அவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதால் பயனில்லை.

ஆளும் தரப்பில் உள்ளவர்களின் இன்னமும் ஐந்தாறு பேரை எமது மக்கள் இணைத்துக்கொண்டால் அரசாங்கம் நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்து விடும். ஆகவே அதற்கான முயற்சிகளையே மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கின்ற தருணத்தில் புதிய பிரதமர் தலைமையில் ‘தேசிய நிறைவேற்று சபை’ நிறுவப்பட்டு அனைத்து தரப்பினரும் அதில் பங்கேற்க வேண்டும். அந்த தற்காலிக கட்டமைப்பு ஊடாக பொருளாதார மீட்சிச் செயற்பாடுகளில் ஈடுபடமுடியும். அதனைத் தவிர்த்து நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதால் எவ்விதமான பயனுமல்லை.இந்த விடயத்தினை நான் உள்ளிட்ட எமது தரப்பினர் சஜித் பிரேமதாசவுடன் உரையாடி தெரிவித்துள்ளோம்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவார்களாயின், அதற்கு நாம் ஆதரவளிக்க முடியாது. ஆகவே அதுதொடர்பில் எமக்குள் கலந்துரையாடல்களைச் செய்து இறுதி முடிவினை எடுப்போம் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025