நாட்டை விட்டு வெளியேற தயாராகும் மக்கள் - வெளிவந்த அறிவிப்பு
srilanka
people
passport
By Jaso
கடந்த 14 நாட்களில் 60,000க்கும் அதிகமானோர் கடவுச்சீட்டு பெற வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு பெற வருபவர்களின் எண்ணிக்கை அவ்வாறே இருப்பதாக திணைக்களத்தின் கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டாளர் எச்.பி.சந்திரலால் தெரிவித்தார்.
கடந்த 5ம் திகதி முதல் 26ம் திகதி வரை 14 அலுவலக நாட்களில் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தற்போதைய நெரிசலைக் குறைக்கும் வகையில் அலுவலகப் பணிகளை காலை 6 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகவும், இம்மாதத்தின் பின்னர் இந்நிலைமை குறைவடையும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நம்புகிறது.