விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள நற்செய்தி
சிறுபோகப் பருவத்தில் அதிக பரப்பளவில் பயிர்ச்செய்கையைத் தொடங்குவதற்கான எதிர்பார்ப்பில் மார்ச் 15 ஆம் திகதிக்கு பிறகு நெல் வயல்களுக்கு தண்ணீர் திறக்க தீட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) தெரிவித்துள்ளார்.
சிறுபோக பயிர்ச்செய்கைக்காக விவசாய நிலங்களுக்கு நீர் விடுவிப்பது குறித்து விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து நெல் வயல்களும் பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பிரச்சினை
அத்தோடு, நெல் நிலங்களை மீட்பதில் உள்ள தற்போதைய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
இந்த நிலையில், குறித்த திட்டம் தரிசு நிலத்தைப் பயிரிடுவதற்கான திட்டம் அல்ல என்றும், ஒவ்வொரு பகுதியிலும் பயிரிடக்கூடிய பயிர்களை அறிவியல் அடிப்படையில் அடையாளம் காண முடியும் என்றும், அந்தப் பயிர்களை சம்பந்தப்பட்ட பகுதியின் விவசாய ஆணையரின் ஒப்புதலுடன் பயிரிடலாம் என்றும் அதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
