விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்
நெல் கொள்முதல் செய்வதற்காக திறைசேரியில் இருந்து ரூ.500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணத்தில் ஒரு பகுதி விவசாய அமைச்சிற்கு அனுப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் கே. டி. லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் இன்று (5) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அதன்படி, இம்முறை நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.120 வழங்குவதன் மூலம், ஒரு விவசாயிக்கு கடந்த முறையை விட ரூ.15 அதிகமாக கிடைக்கும் என்றும், மற்ற நெல்லின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நெல் கொள்முதல்
அதன்படி, விவசாய அமைச்சினால் நெல் கொள்முதல் செய்வதற்காக பெறப்படும் பணம் தேவைக்கேற்ப நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளிடமிருந்து நெல் வாங்கிய பிறகு, கடந்த காலங்களைப் போல நீண்ட காலத்திற்கு பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படாது என்றும் அமைச்சர் லால் காந்த வலியுறுத்தியுள்ளார்.
இந்த முறை கொள்முதல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற, கையிருப்பு மேலாளரைத் தவிர, ஒரு அபிவிருத்தி அதிகாரி மற்றும் ஒரு விவசாய அமைப்பு பிரதிநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், பொது நிதியைப் பயன்படுத்தி அரசு வாங்கும் நெல் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சர் கே. டி. லால் காந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)