இலங்கைக்கு கடத்தவிருந்த லட்சக்கணக்கிலான வலி நிவாரணி மாத்திரைகள் இந்தியாவில் பறிமுதல்
இந்தியாவிலிருந்து(India) இலங்கைக்கு(Sri Lanka) கடத்தவிருந்த 11.88 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவரை காவல்துறையினர் திருப்புலானி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையானது, நேற்றையதினம்(04) ) இரவு பெரியபட்டினம் கடற்கரை அருகில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரியபட்டினம் கடற்கரை அருகே தனியார் வாகனமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆரம்பக்கட்ட விசாரணை
சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ளதோடு, மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், நள்ளிரவு 1 மணியளவில் பெரியபட்டினத்தில் உள்ள தொடர்புள்ள ஒருவரிடம் சரக்குகளை ஒப்படைக்க இருவரும் திட்டமிட்டிருந்ததாகவும், பின்னர் ஒரு கப்பலில் இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடத்தல் தொடர்பில் குறித்த வாகனத்தின் சாரதியை காவல்துறையினர் தேடி வருவதோடு, வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |