அமெரிக்காவின் புதிய செய்தியுடன் ஈரானில் தரையிறங்கிய பாகிஸ்தான் இராணுவத்தளபதி
அமெரிக்காவுடனான சாத்தியமான புதிய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இராணுவத் தளபதி தலைமையிலான உயர்மட்ட பாகிஸ்தான் தூதுக்குழு புதன்கிழமை ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு வந்தடைந்தது.
"தொடர்ந்து நடைபெற்று வரும் மத்தியஸ்த முயற்சிகளின் ஒரு பகுதியாக" தெஹ்ரானுக்கு வந்த ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி மற்றும் பிறருடன் வந்துள்ளார் என்று பாகிஸ்தான் இராணுவம் ஒரு அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வந்தடைந்த தூதுக்குழுவை அராக்சி வரவேற்றார்
வந்தடைந்த தூதுக்குழுவை அராக்சியே வரவேற்றார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கான திட்டத்தை முனீர் மற்றும் அராக்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் கோடிட்டுக் காட்டும் என்று ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வோஷிங்டனின் புதிய செய்தி
வோஷிங்டனின் புதிய செய்தியைக் கொண்டு வந்துள்ள பாகிஸ்தான் தூதுக்குழு, ஈரான் அதிகாரிகளுடனான சந்திப்புகளில் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐஆர்ஐபி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் தங்கள் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் வார இறுதியில் பாகிஸ்தானில் அரிதான நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தின, ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |