ட்ரம்ப்பின் காஸா அமைதி வாரியத்தில் இணையும் நாடுகள்...! பாகிஸ்தானின் அதிரடி முடிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அழைப்பை ஏற்று, காஸா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸா நகரத்தை நிர்வகிப்பதற்கும், அங்குள்ள மக்களின் மறுவாழ்விற்கும் உலகத் தலைவர்கள் இடம்பெறும் அமைதி வாரியத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ட்ரம்ப் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில், காஸா அமைதி வாரியத்தில் இணையுமாறு பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்து வந்தார்.
அமைதி வாரியம்
இதன் அடிப்படையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃபிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று, காஸா அமைதி வாரியத்தில் இணைவதற்கு பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இன்று (21-01-2026) அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல், மொராக்கோ, வியட்நாம், கஜகஸ்தான், ஹங்கேரி, அர்ஜென்டினா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் இந்த அமைதி வாரியத்தில் இணைந்துள்ளன.
இந்த வாரியத்தில் இணைவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள இந்த வாரியத்தில் இணைவது குறித்து இந்திய அரசு இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
மேலும் பராகுவே, கனடா, எகிப்து, துருக்கி, ரஷ்யா, ஸ்லோவேனியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |