பாகிஸ்தானின் மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு - அதிகரிக்கும் பலியானோர் எண்ணிக்கை(காணொளி)
இரண்டாம் இணைப்பு
பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 150 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த தாக்குதல் காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மதியம் தொழுகைக்காக மசூதிக்கு சென்றிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
முதலாம் இணைப்பு
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றாக இடிந்து விழுந்ததாகவும், பலர் அதில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚡ Pakistan: Blast inside the Mosque near most secured Police Lines in Peshawar.
— Megh Updates ?™ (@MeghUpdates) January 30, 2023
One side of the mosque has collapsed.
More than 50 injured. Death numbers not known yet. Emergency declared in nearby hospitals pic.twitter.com/F9VF5a3a4d
மேலும், இறப்புக்களின் விபரம் இதுவரை தெரியவில்லை என அந்நாட்டு மீட்புக்குழுவினரால் கூறப்பட்டுள்ளது.

