கச்சதீவு சர்ச்சை - தி.மு.க துரோகத்தின் மறு உருவமாம்
இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்க்கப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்த அப்போதைய முதலமைச்சர் என்ற வகையில் மு.கருணாநிதி எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ஒ. பன்னீர் செல்வம் குற்றம் சுமத்தியுள்ளார்.
1974 ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டிருந்தது.
கடல் எல்லை உரிமை

இந்த உடன்பாட்டின் அடிப்படையில் இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி கச்சதீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
துரோகத்தின் மறுஉருவம்

வரலாற்றை தெரிந்து கொள்ளாமல், தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதையும் மீறி கச்சதீவு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமன் என அவர் கூறியுள்ளார்.
கச்சதீவு பிரச்சினையில் துரோகத்தின் மறுஉருவம் தி.மு.க என்றும் கச்சதீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மௌனம் காத்தது துரோகம் என்றும் அவர் சாடியுள்ளார்.