பதில் சட்டமா அதிபராகும் பரிந்த ரணசிங்க
Ranil Wickremesinghe
Sri Lanka
Law and Order
By Aadhithya
இலங்கையின் (Sri Lanka) பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க (Parinda Ranasinghe) நியமிக்கப்படவுள்ளார்.
பிரதம நீதியரசர் முன்னிலையில், அவர் நாளை (01) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், கடந்த 26ஆம் திகதி சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது.
அதிபர் நடவடிக்கை
இதன்படி, பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்கவை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், அவரை சட்டமா அதிபர் பதவிக்கு நியமிப்பதற்கான அதிபரின் பரிந்துரை எதிர்வரும் காலங்களில் சட்ட சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்