ஊடக அடக்குமுறைக்கு அரசாங்கம் தயார் இல்லை - சபையில் பந்துல
ஏந்தவொரு ஊடகத்தையும் அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் தயார் இல்லை என்று அரசு செயல்பட்டு வருவதாக, வெகு ஜன ஊடக அமைச்சரும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (28) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2023 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் 5வது நாளான இன்று உரையாற்றியபோதே இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கு கடந்த காலத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
ஊடக தர மேம்பாடு

இதனை சரிசெய்யும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கின்றது. எந்தவொரு ஊடக நிறுவனத்தையும் அல்லது ஊடகவியலாளரையும் ஒடுக்க மாட்டோம்.
உயர்தர ஊடகக் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மேலும் விரிவுபட்ட வகையில் விவாதிக்கப்பட்டு தன்னிச்சையான கட்டுப்பாடு மற்றும் ஊடக தொழில் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் செயல்படுவதாகவும்.
நாடு கண்டுள்ள வீழ்ச்சிக்கு அமைவாக ,நாட்டின் பாரிய பாதிப்பு வெளிநாட்டிலும் இடம்பெற்றுள்ளது. வீதிகளில் இடையூறு செய்தல், நாடாளுமன்றத்தை கூடவிடாமல் இருப்பதற்கான நிலையை ஏற்படுத்துதல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு இடையூறு செய்தல் போன்ற விடயங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றன.” என தெரிவித்தார்.