நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
Parliament of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து நுழைவாயில்களுக்கும் வீதித் தடைகள் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாளை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
சிறிலங்காவின் புதிய அதிபரை நியமிப்பதற்கான வேட்புமனு நாளைய தினம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இரகசிய வாக்கெடுப்பு
அதனைத்தொடர்ந்து, நாளை மறுதினம் இது தொடர்பான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.
இதேநேரம், நாட்டில் இன்று முதல் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.