கூட்டமைப்பு என்பது வெறும் வாய் வார்த்தையா - தமிழரசின் நிலைப்பாடு
இலங்கை தமிழரசு கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அது பதிவு செய்யப்படாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் செவ்வாய்கிழமை(10.02.2026) மாலை வெல்லாவெளியில் நடைபெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற குழு தலைவர்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியில் எட்டு பேரைக் கொண்ட நாடாளுமன்ற குழு ஒன்று உள்ளது.
அந்த நாடாளுமன்ற குழு ஊடாக நாடாளுமன்ற குழு தலைவர் செய்யப்பட்டாரா என பலரும் கேட்கின்றார்கள்.

ஆனாலும் எமது கட்சியின் அரசியல் குழு தான் நாடாளுமன்ற குழு தலைவரை தெரிவு செய்திருக்கின்றது தவிர எமது நாடாளுமன்ற குழுவிடம் இந்த நாடாளுமன்ற குழு தலைவர் தெரிவு சம்பந்தமாக பேசவில்லை.
மாறாக அரசியல் குழு முடிவு எடுத்த பின்னர் அந்த செய்தியை சொன்னார்கள். நாடாளுமன்றக் குழுவிடம் கலந்தாலோசித்த பின்னர் அந்த முடிவை அவர்கள் எடுக்கவில்லை.
எமது கட்சிக்காக தொடுக்கப்பட்டுள்ளது வழக்கு எப்போது முடிவுறுத்தப்படுகின்றதோ அப்போதுதான் எமது கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறும்.
கூட்டம் நடப்பதற்குரிய வாய்ப்பு
வழக்கு இருக்கும் வரை பொதுச்சபை கூட்டம் நடப்பதற்குரிய வாய்ப்புகள் இல்லை.

வழக்கு வைத்தவர்கள், வழக்கு வைக்க தூண்டியவர்கள் தான் இந்த விடயம் பற்றி ஊடகங்களுக்கு பதிலளிக்க முடியும்.
இலங்கை தமிழரசு கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அது பதிவு செய்யப்படாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |