கடவுச்சீட்டு தொடர்பாக புதிய அபராதம் - அரசாங்க தகவல் திணைக்களம்
குடிவரவுத் திணைக்களத்தின் படி, ஒரு நாள் சேவையின் கீழ் தினமும் 2,500 முதல் 3,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு முன்பு சராசரியாக 1,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்பட்டன என குறிப்பிடப்பட்டது.
அபராதம்
ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்குவதற்கு 20,000 ரூபா அறவிடப்படுகின்றது.
மேலும், ஒரு வருடத்திற்குள் வெளிநாட்டு கடவுச்சீட்டு தொலைந்து போனால் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் 15,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
