சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவது தேசிய குற்றம் - தயாசிறி ஜயசேகர
தரகு பணத்தை பெற்றுக்கொள்வதற்காக மிகப் பெரிய தொகை சீன நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த தரகு பணத்தை பெற்றுக்கொள்ளவே 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துகின்றனர் என்பது தெளிவானது.
சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், நிராகரிக்கப்பட்ட சேதனப் பசளைக்கு மிகப் பெரிய தொகைப் பணத்தை செலுத்துவது தேசிய குற்றம். ஐந்து சதம் கூட செலுத்தப்படாது,
கப்பலில் இருக்கும் பசளைகளை ஏற்க போவதில்லை என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதற்கு புறம்பாக தற்போது நடந்துள்ளது. இவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களிடம் தனிப்பட்ட ரீதியில் இந்த பணத்தை அறவிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.