24 மணிநேரத்திற்குள் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் : பாகிஸ்தான் பிரதமர்
அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் தனது சமூக வலைதளப் பதிவில்,“முன்னெப்போதையும் விட அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு முடிவை எட்டவிருக்கிறோம். இறுதி முடிவு 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தை அடுத்த வாரம்
அதனைத் தொடர்ந்து, உடனடியாக அமைதி ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டு, தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

பேச்சுவார்த்தையில் தொடர்ந்து அர்ப்பணிப்பு காட்டிய அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நீண்டகால அமைதிக்கு ஒரு வலுவான அடித்தளம்
மேலும், பிராந்தியத்தில் எங்களுக்கு ஆதரவளித்த சகோதர நாடுகளுக்கும் எங்களது நன்றி. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தின் மூலம் நீண்டகால அமைதிக்கு ஒரு வலுவான அடித்தளம் அமையும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |