வீதியைக் கடந்த குடும்பஸ்தரை மோதித் தள்ளிய கப் வாகனம்
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Accident
By Thulsi
வீதியைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர், 'கப்' ரக வாகனத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் சிவகுமார் (வயது 55) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
கிளிநொச்சி, தருமபுரம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சுண்டிக்குளம் சந்தியில் கடந்த 23 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
படுகாயமடைந்த குடும்பஸ்தர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்துள்ளார்.

தருமபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், விபத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி