கைதாவதை தடுக்க உயர் நீதிமன்றை நாடினார் பீரிஸ்
உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல்
காலிமுகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் அருட் தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்வதற்கு காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் அவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
பிரதிவாதிகளாக உயர் அதிகாரிகள்
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோன், காவல்துறை அதிபர், இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, கடற்படைத் தளபதி, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக அவரது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எவ்வித நியாயமான அடிப்படையும் இன்றி தம்மை கைது செய்ய பிரதிவாதிகள் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவந்த பீரஸ் பாதிரியார், தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பு வழங்குமாறும், தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறும் அந்த மனுவில் மேலும் கோரியுள்ளார்.

