ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
Sri Lanka
By Raghav
நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் தாம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21.03.2025) உரையாற்றும் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வூதியக் கொடுப்பனவு
மேலும், தற்போது 1 மில்லியன் ரூபாயாக காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதித் தொகை 250,000 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுமெனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.
எனினும் தமக்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் வேண்டாம் என எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி