பின்வாங்கிய பாக்..! இந்தியா - பாகிஸ்தான் T20 போட்டி - ரசிகர்களுக்கு நற்செய்தி
பாகிஸ்தான் அரசாங்கம் தனது தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுடன் திட்டமிடப்பட்ட ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
குறித்த தினத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதுவதற்குப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது, இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி
இந்நிலையில் லாகூரில் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகள் சந்தித்தனர்.
ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் முபாஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வியை சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் உலகக்கிண்ண T20 தொடரின் எதிர்பார்ப்பு மிக்க போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததன் படி குறித்த போட்டிக்கான டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்ள ரசிகர்கள் இலங்கை கிரிக்கட் வாரியத்தின் உத்தியோகபூர்வ தளத்தை அனுக முடியும்.
இதன்படி இங்கு குறிப்பிடப்பட்ட தளத்தில் டிக்கட்டுக்களை ரசிகர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
Link - https://tickets.cricketworldcup.com/explore/c/icc-mens-t20-world-cup-2026
மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி
இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தொடரின் இணை நடத்துனர் என்ற வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் (ICC) இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இலங்கை தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |