அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
2026 வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (7) பிற்பகல் சமர்ப்பிக்கவுள்ள 2026 வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
வரவு செலவுத் திட்ட உரையை இன்று பிற்பகல் 01.30 மணிக்கு ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளம்
அரச விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு - செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும்.

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான அரச செலவினங்களுக்காக 4,434 பில்லியன் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சுக்காக ரூபா 301 பில்லியனும், ஜனாதிபதியின் செலவுத் தலைப்பிற்காக ரூபா 11 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் 30 வீதம் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அஸ்வெசும வழங்குவதற்காக 24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்படமாட்டாது. மேலும் நீண்ட கால வேண்டுகோளாக இருந்து பாவித்த வாகனங்கள் இறக்குமதிகள் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |