நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 95 ஆக உயர்வு.. நிலநடுக்கம் குறித்து வெளியாகிய அறிக்கை
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
சில மணி நேரங்களுக்கு முன்பு உயிரிழப்பு எண்ணிக்கை 31 என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 95 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 403 பேர் காணாமல் போயுள்ளனர்.
இவர்களில் 61 பேர் நேபாளர்கள் என்றும் 341 பேர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகிய காரணம்
காணாமல் போனவர்களில் 200 பெண்களும், 203 ஆண்களும் அடங்குவதாக நேபாள அரச தரப்பு அறிக்கை வெளியட்டுள்ளது.

இதில் சிக்கியவர்கள் 26 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உள்ளூர் நேரப்படி காலை 8.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பனிச்சரிவு ஏற்பட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல்கள் இன்னும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 26 காவல்துறையினர், 9 ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் 44 இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |