அதிபர் தேர்தல் குறித்து மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் : வஜிர அபேவர்த்தன சுட்டிக்காட்டு

Ranil Wickremesinghe Sri Lanka Vajira Abeywardena Election
By Sathangani Dec 29, 2023 05:12 AM GMT
Report

அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட பேரழிவு மீண்டும் தங்களின் எதிர்கால பிள்ளைகள் அனுபவிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தல் இடம்பெறும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட கட்சி காரியாலயத்தில் நேற்று  (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்தியப் பெருங்கடலில் மீண்டுமொரு நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் மீண்டுமொரு நிலநடுக்கம்


ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார்

''பல வருடங்களுக்குப் பின்னர் எமது நாட்டு கிறிஸ்தவ மக்கள் இந்த முறை நத்தார் தினத்தைக் கொண்டாட முடியுமாகி இருந்தது. கடந்த 3 வருடங்களாக பொருளாதார நெருக்கடி, உலகில் ஏற்பட்ட தொற்று நோய் நிலைமைகள் காரணமாக எமது நாட்டு மக்கள் மிகவும் அழுத்தத்துடனே இருந்தார்கள்.

ரணில் விக்ரமசிங்க Ranil Wickremesinghe சிறிலங்கா அதிபர் Sri lanka President

சிங்கள, தமிழ், கிறிஸ்தவ மக்களுக்கு தங்களின் மத நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியாத நிலை இருந்தது. இந்த அழுத்தம் இறுதியில் நாங்கள் வங்குராேத்து தேசமாக மாறினோம். அத்துடன் வங்குராேத்து அடைந்த இந்த நாட்டை பொறுப்பேற்க யாரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

எப்படியாவது ஒருவருடமும் 6மாதங்கள் ஆகும்போது இந்த வங்குராேத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியுமாகியுள்ளது. இதன் காரணமாக எமது வியாபாரிகளின் கடன் நாணய கடிதம் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் நாணய கடிதமாக மாறியுள்ளது.

அத்துடன் 2024 ஜனவரியாகும்போது எமக்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெக்கா நிறுவனம் உள்ளிட்ட எமக்கு நன்கொடை வழங்கிய மற்றும் கடன் வழங்கிய குழுவினர் நிறுத்தியிருந்த அபிருத்தி வேலைத்திட்டங்கள் மீண்டும் இலங்கைக்குள் ஆரம்பிக்க இருக்கின்றன.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! அடுத்த ஆண்டு முதல் குறைவடையப்போகும் மின்கட்டணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! அடுத்த ஆண்டு முதல் குறைவடையப்போகும் மின்கட்டணம்


உலக தலைவர்களின் கவனம் 

இவ்வாறான நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தற்போது பிரதான விடயமாக இருப்பது அதிபர் தேர்தலை எப்போது நடத்துவது என்பதாகும். அதேநேரம் அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கப்போவதாக பலரும் தெரிவித்திருக்கின்றனர். எவ்வாறு இருந்தாலும் இலங்கை மக்கள் இதுதொடர்பாக மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டி இருக்கிறது.

இங்கிலாந்து பிரதமர் England PM சீன அதிபர் China President அமெரிக்க அதிபர் America President

அத்துடன் அதிபர் தேர்தலுக்கு முன்வந்திருக்கும் வேட்பாளர்களுக்கு நாடொன்றை நிர்வகிக்க முடியுமா அல்லது இந்த வேட்பாளர்களுக்கு உலக தலைவர்களை சமாளித்துக்கொண்டு இலங்கையை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியுமா என்பதை மக்கள் நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க கடந்த ஒருவருடம் 6 மாதங்களுக்குள் அமெரிக்க அதிபர், சீன அதிபர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இந்திய பிரதமர் உள்ளிட்ட உலகில் பிரதான தலைவர்களின் கவனத்தை இலங்கையின்பால் செலுத்தியே இலங்கையை வங்குராேத்து நிலையில் இருந்து மீட்டு, முன்னோக்கி கொண்டுசெல்கிறார்.

உலகில் பல நாடுகள் வங்குராேத்து நிலையில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இருக்கும்போது ரணில் விக்ரமசிங்க தனது அனுபவம் மற்றும் ஆளுமை காரணமாக எமது நாட்டை வங்குராேத்து நிலையில் இருந்து மீட்டிருக்கிறார்.

விஜயகாந்தின் உடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம்(நேரலை)

விஜயகாந்தின் உடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம்(நேரலை)


மீண்டும் வரிசை யுகம் 

மேலும் அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் ஒருவரை தெரிவு செய்துகொள்வதற்கான தேர்தல், பதவியில் இருக்கும் அதிபரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு குறையாத மற்றும் இரண்டு மாதங்களைவிட அதிகரிக்காத கால வரையறைக்குள் இடம்பெற வேண்டும்.

fuel shortage in sri lanka

அப்படியானால் தற்போது இருக்கும் அதிபர் போட்டியிடுவதாக இருந்தால், தான் போட்டியிடுவதாக தெரிவிக்க வேண்டும். அதன்போது அதிபர் தேர்தல் இடம்பெறும். அவ்வாறு இல்லாவிட்டால் தேர்தல் ஆணையாளரின் கடமையை செய்ய வேண்டி ஏற்படுகிறது.

அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நாட்டு அதிபர் செயற்பட முடியாது. என்றாலும் நாங்கள் மீண்டும் எரிபொருள் வரிசைக்கு, எரிவாயு வரிசைக்கு செல்வதா நாட்டை வீழ்ச்சியடையச் செய்வதா அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது மேற்கொண்டிருக்கும் தேசிய கொள்கை கட்டமைப்பை அடுத்துவரும் 12 வருடங்களுக்காவது தொடர்ந்து மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை எடுக்கிறதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்'' என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026