வறுமையின் கோரம்! ஆடைகளைத் திருடும் நிலையில் மக்கள் - தமிழர் பகுதியில் நடந்த துயரம் (படங்கள்)
வவுனியா - தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஆடைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றுஇரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றில் ஆடைகளை திருடியபோது கையும் மெய்யுமாக மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். அவரை சுற்றிவளைத்த இளைஞர்கள் அவரது கைகளை கட்டி நையப்புடைத்ததுடன், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ள நிலையில் வவுனியாவில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.