அரசாங்கத்திற்கு எதிராக நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் வீதிக்கு வந்த மக்கள் (காணொளி)
நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் பொருளாதார வீழ்ச்சி உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருட்களின் தட்டுப்பாடுகள் போன்றவற்றை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக பொத்துவில் அறுகம்பையில் தீப்பந்தங்களை கைகளில் ஏந்தி ஐக்கிய மக்கள் சத்தியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தீப்பந்த ஆர்ப்பாட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை - பொத்துவில் தொகுதியின் பிரதான அமைப்பளார் அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் றஹ்மான் ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று இரவு பொத்துவில் அறுகப்பை பிரதான வீதியில் இடம்பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது அரசின் அராஜக ஆட்சி முறைக்கு எதிராகவும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருட்களின் தட்டுப்பாடுகள் மக்களின் வாழ்கை செலவு அதிகரிப்பு போன்றவற்றினை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய தீப்பந்த ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.