மகிந்தவின் மரணத்திற்காக பட்டாசுகளுடன் காத்திருக்கும் மக்கள் -முன்னாள் அமைச்சர் வேதனை
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மரணிக்கும் வரையில் சிலர் பட்டாசுகளுடன் காத்திருப்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க வேதனையுடன்தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே இந்த நாட்டில் மீளவும் பிறக்கக் கூடாது என பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவிடம் குறைகள் காணப்பட்டாலும் இந்த நாட்டின் தீர்மானமிக்க சேவைகளை ஆற்றிய வரலாற்று நாயகன் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவரின் மரணத்தை கொண்டாடுவது நல்ல பண்பு கிடையாது இவ்வாறான ஓர் தலைவர் மரணிக்கும் வரையில் காத்திருப்பது மிகவும் துயரமான ஓர் நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதர்கள் அன்றி விலங்குகள் இறந்தாலும் கொண்டாடி மகிழும் பழக்கம் என்னிடமில்லை.பிரபாகரன் உயிரிழந்த தினத்தில் பலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடிய போதிம் தாம் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரின் மரணத்தை கொண்டாடுவது நல்ல பண்பு கிடையாது.மகிந்த ராஜபக்ச தன்னுடன் உரையாடியதாகவும் அவர் நல்ல சுகமாக இருக்கின்றார்.
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக சிலர் செய்த பிரசாரம் குறித்து தாம் கூறியபோது, “அதுதான் விமலே..எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூட தெரியவில்லை” என்று கூறி உரக்க சிரித்தார் என்றும் முன்னாள் அமைச்சர் கூறினார். "