ஹிட்லரிஸம் பேசுவதற்கு முன்னர் காற்சட்டையை சரியாக அணிய வேண்டும் - ரணிலை விளாசிய கே.டி!
ஹிட்லர் பற்றிக் கதைப்பதற்கு முன்னர் காற்சட்டையை எப்படி சரியாக அணிவது என்பதை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க புரிந்துகொள்ள வேண்டும் என கே.டி .லால்காந்த கேலி செய்துள்ளார்.
மேலும் மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபகசர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி .லால்காந்த தெரிவித்தார்.
பூண்டுலோயா பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அண்மையில் விமான நிலையம் வந்த பசிலுக்கு அவரின் சகாக்கள் மற்றும் அடியாட்களால் வழங்கப்பட்ட வரவேற்பு குறித்தும் தான் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடு திரும்பிய பசிலுக்கு ராஜ வரவேற்பு

அதுமட்டுமன்றி, நாட்டை விட்டோடிய பசில் ராஜபக்ச அண்மையில் நாடு திரும்பியதோடு, பலமான அரசியல் இயக்கத்தை அவர் உருவாக்க போவதாகவும் சிலர் கூறித்திரிகின்றனர்.
அதேவேளை தான் நாட்டைவிட்டு செல்ல முற்படுகையில் விமான நிலைய ஊழியர்கள் தன்னை எப்படி கவனித்தார்கள் என்பதை பசில் ராஜபக்ச மறந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, கொள்ளையர்கள் மற்றும் பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்தும் போராடுவதை கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.