ட்ரம்பின் உயிரை காப்பாற்றிய கொவிட் மருந்தை இலங்கைக்கும் வழங்க அனுமதி
இலங்கைக்கு கொவிட் நோயாளிகளுக்கு வழங்கப்படும் 'ரெகன் கோவ்' என்ற மருந்தை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சின் மருந்து நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இரண்டு மருந்துகளின் கலவையான ரெகன் கோவ் வழங்குவதன் மூலம் கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதனை ஏற்றுக் கொண்டு உலகின் பல நாடுகள் அந்த மருத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
இந்த மருந்தை வழங்குவதன் மூலம் உயிர் ஆபத்துக்களை 81 வீதம் குறைக்க முடியும் என பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த மருந்து மிகவும் தகுதியானதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உட்பட நாடுகள் பலவற்றில் தற்போது வரையில் இந்த மருந்து வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,