சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே திசைகாட்டியில் களமிறங்கியுள்ளனர் : சாணக்கியன் எம்.பி பகிரங்கம்
சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட பலரே தற்போது திசைகாட்டி சின்னத்தில் களமிறங்கி இருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் காக்காச்சுவட்டைக் கிராமத்தில் நேற்று (30.04.2025) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இங்கு வந்து எமது மக்களின் பிரச்சினைகளை பார்க்கப்போவது அல்ல எமது மக்களுடைய பிரச்சினைகள் எமக்குதான் தெரியும். யானையினால் ஒருவர் பாதிக்கப்பட்டால் உடனே அந்த இடத்தின் நிற்பவர்கள் நாங்கள்தான்.
உள்ளூராட்சி தேர்தல்
இது ஒரு புறம் இருக்க படகு சின்னத்திலே போட்டியிடுகின்றவர்கள் அவர்களுடைய கட்சியின் தலைவருடைய புகைப்படத்தை பிரசுரிக்காமல் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு இருக்கின்றார்கள்.
எவராவது தமது கட்சியின் தலைவரின் புகைப்படத்தை பிரசுரிக்காமல் பிரசுரங்களை விநியோகிப்பார்களா? அவர்களுக்கே புரிந்து விட்டது அவர்களுடைய கட்சித் தலைவரின் படத்தை இட்டு பிரசுரங்களை விநியோகித்தால் அவர்களுக்குக் கிடைக்கும் வாக்கும் இல்லாமல் போய்விடும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
