சீதுவ பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
Sri Lanka Police
Sri Lanka
Law and Order
By Kanooshiya
சீதுவ பகுதியில் உள்ள விடுதியொன்றில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் தயாரான நிலையிலிருந்த ஆறு பேர் 06 பெற்றோல் குண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மூலம் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் குறித்த விடுதியின் மேலாளர் , தொழிலதிபர் ஒருவர் மற்றும் மூன்று முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் உள்ளிட்ட மற்றுமொரு நபர் ஆகியோர் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரான விடுதியின் மேலாளர், நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்