இன்று முதல் கியூ ஆர் முறைமை நீக்கம்..! அமைச்சர் வெளியிட்ட தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Petrol diesel price
Srilankan Tamil News
By Dilakshan
கியூ ஆர் அடிப்படையிலான எரிபொருளை செலுத்தும் முறை இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர அறிவித்துள்ளார்.
மக்கள் இன்று முதல் கியூ ஆர் குறியீட்டை உருவாக்காமல் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கியூ ஆர் முறைமை

கடந்த ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் அதிகம் நிலவியிருந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த கியூ ஆர் முறைமை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.