டுபாயிலிருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்காவில் சுற்றிவளைப்பு...!
நாட்டிற்கு சட்டவிரோதமாக பெருந்தொகையான கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னெடுத்த சோதனை
விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி 34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த 390 கையடக்க தொலைபேசிகள் இவ்வாறு கடத்தி வரப்பட்டுள்ளன.
குறித்த நபர் நேற்று (18) காலை 7.00 மணிக்கு இந்த கையடக்க தொலைபேசிகளுடன் டுபாயில் இருந்து இலங்கை விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான UL-226 விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |