மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம்! மருத்துவ உலகில் புதிய சாதனை
அமெரிக்காவில் முதல் முறையாக பன்றியின் சிறுநீரகம் மனிதனுக்கு பொருத்தப்பட்டு அதன் செயல்பாடு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
நியூயோர்க் நகரில் உள்ள என்.வை.யு மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகம், உறவினர்கள் அனுமதியுடன் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடலில் புதிதாக பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் நன்றாக செயல்பட்டு சரியான அளவு சிறுநீரை வெளியேற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றதால் சிறுநீரக பற்றாக்குறையை போக்கிட முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பன்றியின் சிறுநீரகம் சுமார் ஓர் ஆண்டு வரை மனிதர்களின் உடலில் சரியாகச் செயல்படும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் முதற்கட்ட ஆய்வில் ஏற்கனவே உறுதி செய்துள்ளனர். இருப்பினும், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.